முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் 681வது படை தலைமையகத்துக்கு அருகில் உள்ள காணியில் இன்று நீதிமன்ற அனுமதியுடன் நீதியாளர் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் சட்டவைத்திய அதிகாரி மற்றும் தடயவியல் காவல்துறையினருடன் அகழ்வுப் பணி இடம்பெற்றது. மண்டையோடு சிதைவடைந்தநிலையில் காணப்பட்ட குறித்த உடலத்தில் இரண்டு குண்டுகள் , துருப்பிடித்த துப்பாக்கிரவைகள் , வோக்கி டோக்கி ஒன்றின் சிதைவுகள், இலக்கத்தகடுகள்,சயினைட் குப்பி  ஆகியனவும் மீட்க்கப்ட்டன. … Continue reading முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு